/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை பவுடர் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது போதை பவுடர் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது
போதை பவுடர் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது
போதை பவுடர் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது
போதை பவுடர் கடத்தல் வழக்கில் ஒருவர் கைது
ADDED : ஜூன் 15, 2025 12:16 AM

சென்னை, சென்னை போலீசார், கடந்த 10ம் தேதி கொளத்துார், ரெட்டேரி சந்திப்பு அருகே நடத்திய சோதனையில், 7 கிராம்மெத்ஆம்பெட்டமைன் வைத்திருந்த முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த ஐசக் ராபர்ட், 21 மற்றும் கொளத்துாரைச் சேர்ந்த ரிதேஷ், 21 ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மண்ணடியை சேர்ந்த முகமது அசாருதீன், 27 என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே இரண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.