Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கு திருவொற்றியூரில் பிடிபட்டது

'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கு திருவொற்றியூரில் பிடிபட்டது

'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கு திருவொற்றியூரில் பிடிபட்டது

'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கு திருவொற்றியூரில் பிடிபட்டது

ADDED : செப் 10, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
சென்னை, திருவொற்றியூரில் சுற்றித்திரிந்த, 'மெக்சிகன் ஸ்பைடர்' குரங்கை, வனத்துறையினர் நேற்று பிடித்தனர்.

சென்னை, திருவொற்றியூர் அருகே காலடிப்பேட்டை புது தெருவில் நேற்று இரவு 8:00 மணி அளவில், அரிய வகை குரங்கு ஒன்று சுற்றித்திரிந்தது. இதை பார்த்தவர்கள், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வேளச்சேரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காலடிப்பேட்டைக்கு விரைந்து வந்து வனத்துறையினர் 8:45 மணி அளவில் குரங்கை பிடித்து கூட்டில் அடைத்து எடுத்து சென்றனர்.

பிடிபட்ட குரங்கு, 'மெக்சிகன் ஸ்பைடர்' வகையைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது. இந்த குரங்கு எங்கிருந்து வந்தது என வனத்துறையினர் மற்றும் திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us