Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க அரசாணை

சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க அரசாணை

சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க அரசாணை

சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க அரசாணை

ADDED : செப் 10, 2025 12:29 AM


Google News
சென்னை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 11ம் தேதி கள ஆய்வு மேற் கொண்டார். அப்போது, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என, கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆலையை, மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பரிந்துரை செய்வதற்கு ஏதுவாக, வல்லுநர்கள் குழு அமைத்து முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர் என, சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us