Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு

மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு

மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு

மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு

ADDED : மே 22, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
சென்னை, சென்னை மாநகராட்சி சார்பில், மாநகராட்சியின் கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு, விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் 3ல் துவங்கி 25ம் தேதி வரை நடந்தன.

கேரம், சதுரங்க, கால்பந்து, கோ - கோ, டென்னிஸ், கைப்பந்து உட்பட 17 போட்டிகளில், 2,799 பேர் போட்டியிட்டனர்.

இதில் வெற்றி பெற்ற 559 பேருக்கு, சென்னை, ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா பங்கேற்று, வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us