ADDED : ஜன 11, 2024 01:36 AM
அடையாறு, அடையாறு, கஸ்துாரிபாய் நகர் 2வது பிரதான சாலையில், நேற்று முன்தினம் இரவு 55 மதிக்கத்தக்க ஆண், நீண்ட நேரம் துாங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்த அப்பகுதியினர், தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். எந்த உணர்வும் இல்லாததால், 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. உடலை மீட்ட அடையாறு போலீசார், இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.