தொழிலாளி கொலை: 'பாசக்கார' மனைவி கைது
தொழிலாளி கொலை: 'பாசக்கார' மனைவி கைது
தொழிலாளி கொலை: 'பாசக்கார' மனைவி கைது
ADDED : ஜன 31, 2024 12:24 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில், வசித்தவர் பாலசுப்பிரமணியன், 43. நண்பர் ஒருவருக்கு உதவியாக அரசு மதுக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இரு தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள குளக்கரையில், கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தார்.
பாதிரிவேடு போலீசாரின் விசாரணையில், பாலசுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி, 37, என்பவருக்கும் பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த நெசவு தொழிலதிபர் முத்து ஜெயம், 43, என்பவருக்கும், பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதற்கு இடையூறாக இருந்த பாலசுப்பிரமணியத்தை தீர்த்துக்கட்ட இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, கூலிப்படைக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்துஉள்ளனர்.
சம்பவத்தன்று இரவு, வீட்டின் தெரு முனையில் நடந்து சென்ற பாலசுப்பிரமணியனை, கூலிப்படையைச் சேர்ந்த மூவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். பின் உடலை குளக்கரையில் புதைத்துள்ளனர்.
இதையடுத்து, புவனேஸ்வரி, தொழில் அதிபர் முத்து ஜெயம், கூலிப்படையினர் மாநெல்லுாரைச் ஹேமநாத், 24, இன்பராஜ், 23, சுரேந்தர், 23, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.