/உள்ளூர் செய்திகள்/சென்னை/வந்தே பாரத் ரயில் மோதி பூ வியாபாரி பலிவந்தே பாரத் ரயில் மோதி பூ வியாபாரி பலி
வந்தே பாரத் ரயில் மோதி பூ வியாபாரி பலி
வந்தே பாரத் ரயில் மோதி பூ வியாபாரி பலி
வந்தே பாரத் ரயில் மோதி பூ வியாபாரி பலி
ADDED : மே 25, 2025 12:13 AM
ஆவடி :ஆவடி, கவுரிப்பேட்டை, கள்ளுக்கடை தெருவைச் சேர்ந்தவர் சூரியநாராயணன், 45; பூ வியாபாரி. இவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று காலை, பூ விற்க சென்றவர், சேக்காடு சுரங்கப்பாதை அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, கோவையில் இருந்து சென்னை வந்த 'வந்தே பாரத்' ரயிலில் அடிபட்டு, பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி ரயில்வே போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.