Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அடிக்கடி மின்தடை குன்றத்துாரில் அவதி

அடிக்கடி மின்தடை குன்றத்துாரில் அவதி

அடிக்கடி மின்தடை குன்றத்துாரில் அவதி

அடிக்கடி மின்தடை குன்றத்துாரில் அவதி

ADDED : ஜூன் 14, 2025 02:37 AM


Google News
குன்றத்துார்:குன்றத்துார் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 80,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக, அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'குன்றத்துார் மலை அடிவாரம், நந்தம், பாலவராயர் குளக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில், நேற்று முன்தினம் இரவு 10:30 மணி முதல் 1:30 மணி வரை மின் தடை செய்யப்பட்டதால், துாக்கமின்றி அவதிக்குள்ளானோம். குன்றத்துாரில் சமீப காலமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குன்றத்துார் மின்வாரிய அலுவலகத்தினர் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us