ADDED : ஜூன் 02, 2025 04:09 AM
சென்னை:மயிலாப்பூர், கே.கே.நகரில் நாளை முற்பகல், 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், 2வது தளம் 110 கிலோ வோல்ட் திறன் துணைமின் நிலைய வளாகம், கே.கே.நகர் - 78.
மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் திறன் உடைய வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், எண். 97, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை - 34.
மேற்கண்ட இரு இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.