/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நீர்நிலைகளில் தொடர்ந்து கழிவுகள் கொட்டி அராஜகம் லாரிகளை பறிமுதல் செய்ய வலியுறுத்தல் நீர்நிலைகளில் தொடர்ந்து கழிவுகள் கொட்டி அராஜகம் லாரிகளை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
நீர்நிலைகளில் தொடர்ந்து கழிவுகள் கொட்டி அராஜகம் லாரிகளை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
நீர்நிலைகளில் தொடர்ந்து கழிவுகள் கொட்டி அராஜகம் லாரிகளை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
நீர்நிலைகளில் தொடர்ந்து கழிவுகள் கொட்டி அராஜகம் லாரிகளை பறிமுதல் செய்ய வலியுறுத்தல்
ADDED : மார் 18, 2025 12:40 AM

சென்னை, அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி ரயில்வே சாலை 80 அடி அகலம் உடையது. இந்த சாலையை ஒட்டி, சதுப்பு நிலம் அமைந்துள்ளதால், சாலையில் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளது.
வேளச்சேரி, தரமணி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட பகுதிகளில் வடியும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக சதுப்பு நிலத்தை அடைகிறது.
இந்த சாலையை பராமரிப்பது யார் என, பல ஆண்டுகளாக மாநகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் இடையே, பனிப்போர் நடந்து வருகிறது.
இதன் காரணமாக, சாலையில் கட்டடம், பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற கழிவு கொட்டப்படுகின்றன. அருகில் உள்ள வடிகால், கால்வாய் அவை விழுந்து, நீரோட்டத்தில் தடை ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், இங்கு கொட்டும் கழிவால் நீரோட்டம் தடைபட்டு, குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
அப்போது, கழிவுகள் கொட்டும் லாரிகளை பறிமுதல் செய்து, கண்காணிப்பு கேமராக்கள் போடப்பட்டன. அதையும் மீறி, கழிவு கொட்டுவது தொடர்கிறது. இதை நிரந்தரமாக தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேளச்சேரி மக்கள் வலியுறுத்தினர்.