Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/திறந்தவெளியில் மின்வடங்கள் பழுதடைந்துள்ளதால் அபாயம்

திறந்தவெளியில் மின்வடங்கள் பழுதடைந்துள்ளதால் அபாயம்

திறந்தவெளியில் மின்வடங்கள் பழுதடைந்துள்ளதால் அபாயம்

திறந்தவெளியில் மின்வடங்கள் பழுதடைந்துள்ளதால் அபாயம்

ADDED : ஜன 24, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நங்கநல்லுார், புதைக்காமல் விட்ட மின்வடம் மீது வாகனங்கள் ஏறி இறங்குவதால், பழுதடைந்து காணப்படுகிறது. இதில் மின்கசிவு ஏற்பட்டால், உயிர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை, நங்கநல்லுார், முதல் பிரதான சாலை போக்குவரத்து நிறைந்தது. ரேஷன் கடைகள், வங்கிகள், மருத்துவமனை, உணவகம், பல்பொருள் அங்காடி, எரிபொருள் நிலையம், தனியார் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

மாநகர பேருந்துகள் இயக்கப்படும் இச்சாலையில், தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

ஏராளமான பாதசாரிகள் பயன்படுத்துகின்றனர். இச்சாலையில், உயர் அழுத்த மின்வடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டன. அரைகுறையாக மூடப்பட்டதால், ஒரு சில இடங்களில் மின்வடங்கள் திறந்த வெளியில் செல்கின்றன. அதன் மீது வாகனங்கள் ஏறி இறங்குவதால், ஆங்காங்கே பழுதடைந்து காணப்படுகிறது.

அதிலிருந்து மின் கசிவு ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மின் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, திறந்த வெளியில் இருக்கும் மின்வடத்தை பூமிக்குள் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us