நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய போக்சோ
தொழிலாளிக்கு 'ஆயுள்'
காமுக தந்தை கைது
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் 43 வயது விவசாய கூலி தொழிலாளி. இவர் மே, 22 இரவு, 10:30 மணிக்கு தன், 17 வயது மகளை, தோட்டத்துக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்தார். கரூர் மகளிர் போலீசார், விவசாய கூலி தொழிலாளியை போக்சோவில் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
கோவை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவையை சேர்ந்த அனுராவ் என்பவர் மகன் நிஷார் 36. இவர் ஒரு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததால், இவர் மீது கோவை மாநகர், அனைத்து மகளிர் (கிழக்கு) போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து, கடந்த 7ம் தேதி கைது செய்து, நீதிமன்றக்காவலுக்கு அனுப்பினார். வடக்கு சரக போலீஸ் கமிஷனர் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், நிஷார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
போக்சோவில் வாலிபர் கைது
செங்குன்றம் காவல் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும், 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, கடந்தாண்டு கோடை விடுமுறையில், எண்ணுாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ், 21, என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.