Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கல்லுாரி மாணவர் லாரி மோதி பலி

கல்லுாரி மாணவர் லாரி மோதி பலி

கல்லுாரி மாணவர் லாரி மோதி பலி

கல்லுாரி மாணவர் லாரி மோதி பலி

ADDED : ஜன 12, 2024 11:59 PM


Google News
வடபழனி,-வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், கல்லுாரி மாணவர் உடல் நசுங்கி பலியானார்.

வடபழனி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராகேஷ், 19. இவர், தனியார் கல்லுாரி ஒன்றில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி னார்.

வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் வரும் போது, லாரி ஒன்று ராகேஷின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது, லாரியின் பின் சக்கரம் ஏறி, உடல் நசுங்கி பலியானார்.

சம்பவம் குறித்து, பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராகேஷ் உடலை கைப்பற்றினர். லாரி ஓட்டுனர் ரவிச்சந்திரன், 49, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us