கே.ஆர்.எஸ்., அணையில் 1.55 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 310 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
கே.ஆர்.எஸ்., அணையில் 1.55 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 310 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
கே.ஆர்.எஸ்., அணையில் 1.55 லட்சம் கனஅடி நீர் திறப்பு: 310 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்

முதியவர் பலி
நிப்பானி தாலுகா ஹொன்னரகே கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. கிராமத்தில் வசித்த மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சங்கேஸ்வரா டவுனில் உள்ள சங்கேஸ்வர் கோவிலை மழைநீர் சூழ்ந்தது. முட்டு அளவுக்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் நின்று, அர்ச்சகர்கள் பூஜை செய்தனர்.
ஆற்றுப்பாலம் மூழ்கியது
பெலகாவி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும், மக்களை தங்க வைக்க, மாவட்ட நிர்வாகம் 427 முகாம்களை திறந்து வைத்து உள்ளது. இந்த முகாம்களில் தங்கும் மக்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்று, கலெக்டர் முகமது ரோஷன் அறிவுறுத்தி உள்ளார்.
வெள்ள அபாய பீதி
49.45 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., அணையின் நீர்இருப்பு 48.30 அடியாக உள்ளது. நேற்று இரவு 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,22,021 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1,31,234 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், சாம்ராஜ்நகர் கொள்ளேகால் அருகே பழைய ஹம்பாபுரா கிராம மக்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டு உள்ளது.