Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 4 இடத்தில் 'ஏசி'யுடன் பஸ் நிறுத்தம் * டெண்டர் கோரியது சி.எம்.டி.ஏ.,

4 இடத்தில் 'ஏசி'யுடன் பஸ் நிறுத்தம் * டெண்டர் கோரியது சி.எம்.டி.ஏ.,

4 இடத்தில் 'ஏசி'யுடன் பஸ் நிறுத்தம் * டெண்டர் கோரியது சி.எம்.டி.ஏ.,

4 இடத்தில் 'ஏசி'யுடன் பஸ் நிறுத்தம் * டெண்டர் கோரியது சி.எம்.டி.ஏ.,

ADDED : ஜூலை 03, 2025 12:35 AM


Google News
சென்னை, கொளத்துார், ராயபுரம், பெரம்பூர், வால்டாக்ஸ் சாலை என, நான்கு இடங்களில், 'ஏசி' வசதியுடன் பஸ் நிறுத்தங்கள் அமைக்க, சி.எம்.டி.ஏ., டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னையில், 700க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இவற்றில் மேற்கூரை அமைத்து, மாநகராட்சி பராமரித்து வருகிறது.

ஆனால், சில இடங்களில் மேற்கூரை வசதி இல்லாததால், மழை மற்றும் வெயில் காலங்களில் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.

பஸ் நிறுத்தங்களில் படிப்படியாக மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, சென்னையில் நான்கு பஸ் நிறுத்தங்களில், 'ஏசி' வசதி கொண்டுவரப்பட உள்ளது.

இதுகுறித்து, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அதிகாரிகள் கூறியதாவது:

ராயபுரம், கொளத்துார், பெரம்பூர், வால்டாக்ஸ் சாலை என, நான்கு இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில், 'ஏசி' வசதி அமைக்கப்பட உள்ளது.

இந்த பணியை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டள்ளது. ஆர்வமுள்ள ஒப்பந்த நிறுவனங்கள், ஜூலை 17க்குள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வாகும் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு, ஓரிரு மாதங்களில் பணிகள் துவங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னையில் ஏற்கனவே, கிண்டி கத்திப்பாரா சந்திப்பு அருகே, தனியார் பங்களிப்புடன், 'ஏசி' வசதியுள்ள பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. அவை சரியாக பராமரிப்பின்றி, இருக்கைகள் கூட இல்லாமல் தற்போது, வெறும் கண்ணாடி கூண்டு மட்டுமே உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us