ADDED : ஜூன் 13, 2025 09:26 PM
அயப்பாக்கம்:திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவா, 29; கொத்தனார். இவர், அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம், ஐ.சி.எப்., காலனி, முல்லை நகரில் சீனிவாசன் என்பவர் இடத்தில் கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை, தேவா கட்டடத்திற்கு தேவையான இரும்பு கம்பியை கொண்டு சென்றபோது, மின் கம்பி உரசியதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில், துாக்கி வீசப்பட்ட தேவா, சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சென்ற திருமுல்லைவாயல் போலீசார், தேவாவின் உடலை கைப்பற்றி, இடத்தின் உரிமையாளர் சீனிவாசன், மேஸ்திரி அன்பழகன் ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.