Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கல்லால் அடித்து கொலை

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கல்லால் அடித்து கொலை

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கல்லால் அடித்து கொலை

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கல்லால் அடித்து கொலை

ADDED : ஜூன் 23, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்: பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நீரஜ்குமார், 30. இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.

இவரது மனைவி காஜல் குமாரி, மகன் ஆரவ்குமார், 5. கடந்த 9ம் தேதி, ஆரவ்குமார் காணாமல் போனதை அடுத்து, சிறுவனின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை தேடிவந்த நிலையில், 15ம் தேதி அதே பகுதியில் உள்ள முட்புதரில் அழுகி நிலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

சிறுவன் காணாமல் போன தேதியன்று, அதே பகுதியில் தங்கியுள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த போல்தேவ் என்பவர், சிறுவனை அழைத்து சென்றது, அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவானது.இதையடுத்து, போலீசார் போல்தேவை நேற்று பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை, கல்லால் தலையில் அடித்து கொலை செய்து, முட்புதரில் வீசி சென்றதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, போலீசார் போல்தேவை, கைது செய்து சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us