Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திரு.வி.க.நகரில் 54 பேருக்கு வாரிய வீடு

திரு.வி.க.நகரில் 54 பேருக்கு வாரிய வீடு

திரு.வி.க.நகரில் 54 பேருக்கு வாரிய வீடு

திரு.வி.க.நகரில் 54 பேருக்கு வாரிய வீடு

ADDED : மே 30, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
சென்னை :திரு.வி.க., நகர் தொகுதி, சத்தியவாணி முத்து நகரில் வாழ்ந்த மக்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 438 வீடுகள் கட்டப்பட்டு, 384 பேருக்கு, முதல்வர் ஸ்டாலின், பிப்ரவரியில் வீடுகளை வழங்கினார்.

குடியிருப்புகளை சுற்றி இருந்த மக்களும், தங்களுக்கும் வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில், 54 பேருக்கு வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டன.

ஓட்டேரியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், 54 பேருக்கும், சத்தியவாணி முத்துநகர் திட்டப் பகுதியில், வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us