Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இடத்தை அபகரிக்க முயற்சி அ.தி.மு.க., பிரமுகருக்கு வலை

இடத்தை அபகரிக்க முயற்சி அ.தி.மு.க., பிரமுகருக்கு வலை

இடத்தை அபகரிக்க முயற்சி அ.தி.மு.க., பிரமுகருக்கு வலை

இடத்தை அபகரிக்க முயற்சி அ.தி.மு.க., பிரமுகருக்கு வலை

ADDED : செப் 13, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
பள்ளிக்கரணை, இடத்தை அபகரிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில், அ.தி.மு.க., பெண் பிரமுகரை போலீசார் தேடுகின்றனர்; அவரது கணவரை கைது செய்துள்ளனர்.

பள்ளிக்கரணையைச் சேர்ந்த செந்தமிழ், 41, என்பவர், 200 சதுரடி மனையில் கட்டப்பட்ட கட்டடத்தின் தரை தளத்தை சிப்ஸ் கடைக்கும், முதல் தளத்தை கூரியர் கடைக்கும் வாடகைக்கு விட்டுள்ளார். இரண்டாவது தளத்தில் கழிப்பறை கட்டி வந்தார்.

இந்நிலையில், இந்த கழிப்பறை கட்டுமானத்தை அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., மாவட்ட மகளிரணி இணைச் செயலர் சூர்யா, அவரது கணவர் ஜெய், 33, தாய் நீலா மற்றும் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோர் இடித்துள்ளனர்.

இதுகுறித்து கேள்வி கேட்ட செந்தமிழிடம் தகராறு செய்து, வாடகை விட்டிருந்த கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து செந்தமிழ், தன் இடத்தை அபகரிக்க முயல்வதாக, சூர்யா, ஜெய், நீலா மற்றும் கண்ணன் ஆகியோர் மீது, பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ஜெயை கைது செய்தனர்; மற்ற மூவரையும் தேடுகின்றனர்.

வார்டு 189ல் மறைந்த தி.மு.க., கவுன்சிலர் ரங்கனின் மகள் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us