/உள்ளூர் செய்திகள்/சென்னை/நடந்து சென்ற பெண்ணை சீண்டிய வாலிபர் கைதுநடந்து சென்ற பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
நடந்து சென்ற பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
நடந்து சென்ற பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
நடந்து சென்ற பெண்ணை சீண்டிய வாலிபர் கைது
ADDED : பிப் 24, 2024 11:55 PM
அசோக் நகர், சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபரை, போலீசார் கைது செய்தனர்.
தி.நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 24 வயது இளம்பெண். இவர், கடந்த 21ம் தேதி, தன் சகோதரியுடன் வடபழனி, பஜனை கோவில் தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், இளம்பெண்ணிடம் அசிங்கமாக பேசி, தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இளம்பெண் கூச்சலிடவே, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின்படி, அசோக் நகர் போலீசார் விசாரித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, இளம்பெண்ணிடம் தவறாக நடந்த, கோடம்பாக்கம், சி.ஆர்.பி., கார்டன் இரண்டாவது தெருவைச் சேர்ந்த விக்னேஷ், 21, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 'பைக்'கையும் பறிமுதல் செய்தனர்.