ADDED : செப் 13, 2025 02:04 AM
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறனில் இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த மின்சாரம், சென்னை மின் தேவையை பூர்த்தி செய்கிறது. விரிவாக்க மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் இரவு, 11:39 மணி முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.