ADDED : ஜன 11, 2024 01:29 AM
சென்னை,
சென்னையில் ஒரு வாரத்தில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 47 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஒரு வாரத்தில், வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 47 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 911 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.