Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மகள் தற்கொலை காமுக தந்தைக்கு 10 ஆண்டு சிறை

மகள் தற்கொலை காமுக தந்தைக்கு 10 ஆண்டு சிறை

மகள் தற்கொலை காமுக தந்தைக்கு 10 ஆண்டு சிறை

மகள் தற்கொலை காமுக தந்தைக்கு 10 ஆண்டு சிறை

ADDED : ஜன 24, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு, பள்ளிக்கரணையைச் சேர்ந்த சுரேஷ், 48. 2020 அக்டோபரில், வீட்டில் தனியாக இருந்த 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார்.

மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து, மனைவி, மகளுக்கு, கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயந்து அவரின் மகள், தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கரணை போலீசார் இது குறித்தும் வழக்கு தொடர்ந்தனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது

சிறுமி தற்கொலை வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில், நடைபெற்றது.

இதில் சுரேஷக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பளித்தார்.

அதன்பின், அவரை, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us