Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதி முறைப்படுத்தபடுமா?

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதி முறைப்படுத்தபடுமா?

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதி முறைப்படுத்தபடுமா?

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதி முறைப்படுத்தபடுமா?

ADDED : ஜூன் 25, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
வில்லிவாக்கம், அண்ணா நகர் மண்டலத்தில், வில்லிவாக்கம் ரயில் நிலையம் உள்ளது. சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் வழியாக, ஆவடி, திருவள்ளூர், திருத்தணி, அரக்கேணம் உள்ளிட்ட வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

''சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து, நான்காவது புதிய முனையமாக வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது,'' என, சமீபத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியிருந்தார்.

இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த ரயில் நிலையத்தில், பயணியர் பல்வேறு இன்னல்கள் சந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் பயணியர் வாகனங்களை சாலையிலேயே கண்டமேனிக்கு நிறுத்தி செல்கின்றனர். அதேபோல், நுழைவாயில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பியின் அருகில் அத்துமீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், முதியோர் தடுமாறி விழுகின்றனர். அதேபோல், சாலை முழுதும் பள்ளம் மேடுகளாக இருக்கிறது. ரயில்வே சர்வீஸ் சாலை பல ஆண்டுகளாக படும் மோசமாக காட்சியளிக்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வில்லிவாக்கம் ரயில் நிலையம் புதிய முனையமாக உருவாகுவதற்கு முன், ரயில் நிலையத்தில் பயணியரின் குறைகளை தீர்வுகாணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,கோரிக்கை வலுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us