Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வார்டு அலுவலகத்திற்கு கட்டடம் ஒப்பந்த சிக்கலால் பாதியில் நிறுத்தம்

வார்டு அலுவலகத்திற்கு கட்டடம் ஒப்பந்த சிக்கலால் பாதியில் நிறுத்தம்

வார்டு அலுவலகத்திற்கு கட்டடம் ஒப்பந்த சிக்கலால் பாதியில் நிறுத்தம்

வார்டு அலுவலகத்திற்கு கட்டடம் ஒப்பந்த சிக்கலால் பாதியில் நிறுத்தம்

ADDED : ஜூலை 29, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
காரப்பாக்கம்:சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் வார்டு அலுவலகம் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அலுவலகம், சாலை மட்டத்தைவிட 5 அடி பள்ளத்தில் உள்ளது.

ஒவ்வொரு பருவமழைக்கும், வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. பல ஆவணங்கள் நனைந்து சேதமடைந்துள்ளன.

புதிய அலுவலகம் கட்ட, 1.35 கோடி ரூபாயை, மாநகராட்சி ஒதுக்கியது. பொறியியல், வரி வசூல், சுகாதாரம், கவுன்சிலர் உள்ளிட்ட அலுவலகம் என 5,600 சதுர அடி பரப்பில், கட்டுமான பணி மார்ச் துவங்கியது.

பருவமழைக்கு முன், பணியை முடிக்க வேண்டும் என, ஆதித்யா கட்டுமான நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டது. தரை பலப்படுத்திய தோடு பணி கிடப்பில் போடப்பட்டது.

இதனால், இந்த ஆண்டு பருவமழைக்கும், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து ஆவணங்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஒப்பந்த நிறுவனம் கட்டுமான பணியை மெதுவாக செய்ததால் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் அறிக்கை அனுப்பி உள்ளோம். அவர்கள் முடிவை பொறுத்த அடுக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us