Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ யு.பி.எஸ்.சி., மாணவர்களுக்கு 'வெராண்டா' ஆபர்

யு.பி.எஸ்.சி., மாணவர்களுக்கு 'வெராண்டா' ஆபர்

யு.பி.எஸ்.சி., மாணவர்களுக்கு 'வெராண்டா' ஆபர்

யு.பி.எஸ்.சி., மாணவர்களுக்கு 'வெராண்டா' ஆபர்

ADDED : ஜூலை 11, 2024 12:00 AM


Google News
சென்னை, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வில், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, 'வெராண்டா' ஐ.ஏ.எஸ்., நிறுவனம் 100 சதவீத 'ஸ்காலர்ஷிப்' அறிவித்துள்ளது.

கல்வி சிறப்பு பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள வெராண்டா ஐ.ஏ.எஸ்., நிறுவனம், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 100 சதவீத ஸ்காலர்ஷிப் உதவியுடன் பயிற்சி வழங்க உள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பரத் சீமான் கூறியதாவது:

யு.பி.எஸ்.சி., முதன்மை தேர்வில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும், அவர்களின் திறமையை வளர்க்கவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் நாட்டிற்கு சேவை செய்ய தகுதியுள்ள இளைய சமுதாயத்தை உருவாக்குவதே நோக்கம்.

இத்திட்டத்தால், யு.பி.எஸ்.சி., மெயின்ஸ் மற்றும் பெர்சனாலிட்டி தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள், தங்கள் இலக்கை எளிதாக அடையலாம். தவிர, தங்குமிடம், உணவு மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் உள்ளடக்கிய பயன்களையும் மாணவர்கள் பெறுவர். மேலும் விபரங்களுக்கு 98401 43199 என்ற மொபைல் போன் எண் அல்லது academics@verandaias.com என்ற மின்னஞ்சலில் அறியலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us