ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் திருட்டு
ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் திருட்டு
ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் திருட்டு
ADDED : ஜூன் 10, 2024 02:00 AM
தண்டையார்பேட்டை:தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோவில் தெருவில் நுகர்வோர் கூட்டுறவு ரேஷன் கடை உள்ளது. உணவு இடைவெளியின் போது கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர்.
அப்போது, ரேஷன் கடையின் வெளியே வைத்திருந்த, 19 லிட்டர் மண்ணெண்ணெய் உடன் இரண்டு பேரல்களை மர்ம நபர்கள் இருவர், 'குட்டியானை' எனும் சிறு சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
இது குறித்து ரேஷன் கடை ஊழியர் விஜயகுமார் கொடுத்த புகாரின்படி, காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.