Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாடு முட்டி பூசாரி காயம்

மாடு முட்டி பூசாரி காயம்

மாடு முட்டி பூசாரி காயம்

மாடு முட்டி பூசாரி காயம்

ADDED : ஜூன் 20, 2024 12:36 AM


Google News
சென்னை, திருவல்லிக்கேணியில் சுவாமி ஊர்வலத்தின் போது மாடு முட்டியதில், பூசாரி காயமடைந்தார்.

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்ம பிரம்மோற்சவம் 17ம் தேதி துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை நடந்த பல்லக்கு ஊர்வலத்தின் போது, அங்கு வந்த மாடு ஒன்று பூசாரியை முட்டியது. இதில், அவர் லேசான காயமடைந்தார்.

இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து, போலீசில் புகார் அளிக்கப்படவில்லை. மேலும், மாநகராட்சியிடமும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us