Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'சைபர் க்ரைம்' சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி

'சைபர் க்ரைம்' சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி

'சைபர் க்ரைம்' சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி

'சைபர் க்ரைம்' சர்வர் பழுது புகார் பதிய முடியாமல் அவதி

ADDED : ஜூன் 18, 2024 12:13 AM


Google News
சென்னையில், 'ஆன்லைன்'வழி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கிரடிட் கார்டு மோசடி; பொருட்கள் விற்பது, வீடு வாடகை மோசடி என பல, 'சைபர் கிரைம்' குற்றங்கள் அதிகரித்துள்ளன.

இதை தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கு, 'சைபர் கிரைம்' பிரிவு துவக்கப்பட்டது. அவை, சென்னை மாநகர போலீசார் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தன.

குற்றங்கள் அதிகரித்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மூன்று காவல் மாவட்டங்களுக்கு ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம் என, நான்கு காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டது.

புகார் கொடுப்பவர்கள் நேரடியாக புகார் கொடுக்க முடியாது. முதலில், 'ஆன்லைன்' வாயிலாக http://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும்.

ஆனால், அந்த 'சர்வர்' அடிக்கடி மக்கர் செய்வதால் புகார் அளிக்க முடியாமல் பாதிக்கப்பட்டோர் அவதியுறுகின்றனர்.

எனவே, சைபர் குற்றங்கள் தொடர்பான புகார் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் நிலை குறித்து, 'ஆன்-லைன்' வாயிலாக தெரிந்து கொள்ளவும், வழி வகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

-- நமது நிருபர்- -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us