Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஞ்சமி நிலங்கள் மீட்க போராட்டம்

பஞ்சமி நிலங்கள் மீட்க போராட்டம்

பஞ்சமி நிலங்கள் மீட்க போராட்டம்

பஞ்சமி நிலங்கள் மீட்க போராட்டம்

ADDED : ஜூன் 13, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு, பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் கூட்டுச் சாலையில், பஞ்சமி நிலங்களை மீட்டுத் தரக்கோரி, நெல்வாய்பாளையம் மற்றும் மாணிக்குப்பம் கிராமத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறியதாவது:

நெல்வாய்பாளையம் மற்றும் மாணிக்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு, 1932, 1934, 1942ம் ஆண்டுகளில் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டன.

அதுமட்டுமின்றி, 1979ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் நிபந்தனை நிலங்கள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும், மாற்று சமூகத்தினருக்கு தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, தற்போது அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு, தவறுதலாக மாற்றப்பட்டு உள்ள பட்டாக்களை ரத்து செய்ய கோரி பல முறை மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us