Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஐந்து பேருக்கு மறுவாழ்வு

ஐந்து பேருக்கு மறுவாழ்வு

ஐந்து பேருக்கு மறுவாழ்வு

ஐந்து பேருக்கு மறுவாழ்வு

ADDED : ஆக 02, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
சென்னை, சென்னை, பெரம்பூரில் உள்ள மேட்டுப்பாளையம் உப்பண்டி பாபு தெருவைச் சேர்ந்தவர் நாராயணன், 57. கடந்த, 29ம் தேதி மாலை 3:30 மணியளவில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்கள், உடல் உறுப்புகள் தானம் அளிக்க முன்வந்தனர்.

அதன்படி, கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு கண்கள் என, ஐந்து உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

அதில் நான்கு உறுப்புகள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. ஒரு உறுப்பு, தனியார் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us