Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராஜகோபுர விவகாரம் அமைச்சர் விளக்கம்

ராஜகோபுர விவகாரம் அமைச்சர் விளக்கம்

ராஜகோபுர விவகாரம் அமைச்சர் விளக்கம்

ராஜகோபுர விவகாரம் அமைச்சர் விளக்கம்

ADDED : ஜூலை 11, 2024 12:04 AM


Google News
சென்னை, ''ராயப்பேட்டை, துர்க்கையம்மன் கோவில் ராஜகோபுரம் விவகாரம் தொடர்பாக, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை, வியாசர்பாடி, ரவீஸ்வரர் கோவிலில், 1.98 கோடி மதிப்பீட்டிலான திருப்பணி மற்றும் மேற்கு மாம்பலம், பாஷ்யகார ஆதி சென்னகேசவ பெருமாள் கோவிலில் 59.40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மரத்தேர் உருவாக்கும் பணியை துவக்கி வைத்த பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

ராயப்பேட்டை, துர்க்கையம்மன் கோவிலின் கீழ், மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அப்பணியின்போது, ஸ்திரத்தன்மை இல்லாமல் ராஜகோபுரத்தில் பாதிப்பு ஏற்படும். எனவே, அதை அகற்ற மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

அதன் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us