Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குப்பை கிடங்காக மாறி வரும் புழல் ஏரிக்கரை அணுகு சாலை

குப்பை கிடங்காக மாறி வரும் புழல் ஏரிக்கரை அணுகு சாலை

குப்பை கிடங்காக மாறி வரும் புழல் ஏரிக்கரை அணுகு சாலை

குப்பை கிடங்காக மாறி வரும் புழல் ஏரிக்கரை அணுகு சாலை

ADDED : ஜூன் 26, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
செங்குன்றம், செங்குன்றம், தண்டல் கழனி பகுதி அருகே, புழல் ஏரிக்கரையை ஒட்டி அணுகு சாலை உள்ளது. இங்கு, புழல், கிராண்ட்லைன் சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும், பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன.

இதில், இரு சக்கர வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இரவில் தெரு விளக்கு வெளிச்சமும் இன்றி, அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.

மேலும், கழிவுகளுக்கு தீ வைக்கப்படும்போது ஏற்படும் புகை மண்டலத்தால், கண் எரிச்சல் உள்ளிட்டவற்றாலும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த சாலை வழியாக செங்குன்றம், பாடியநல்லுாரை கடந்து செல்லும் வாகனங்களுக்கும், நல்லுார் சுங்கச்சாவடியில், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 15,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை, அந்த சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன.

குறிப்பாக, செங்குன்றம் - திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு முதல், மாதவரம் - ரெட்டேரி சந்திப்பு வரை, தேசிய நெடுஞ்சாலையின் இருபக்க அணுகு சாலைகளும், மிக மோசமாக சேதமடைந்துள்ளன.

இது குறித்து, புகார் செய்தாலும், தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையம் அலட்சியம் காட்டுகிறது. இது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us