Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெட்டி வேர் தேரில் பெருமாள் அருள்

வெட்டி வேர் தேரில் பெருமாள் அருள்

வெட்டி வேர் தேரில் பெருமாள் அருள்

வெட்டி வேர் தேரில் பெருமாள் அருள்

ADDED : ஜூன் 27, 2024 12:32 AM


Google News
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஆனி மாத நரசிம்ம பிரம்மோற்சவம் கடந்த, 17ல் துவங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 19ல் நடந்தது. விழாவின் ஒன்பதாம் நாள் தீர்த்தவாரி நடந்தது. விழாவின் நிறைவு நிகழ்வாக, நேற்று இரவு, சப்தாவர்ணம் எனும் வெட்டி வேர் தேர் திருவிழா நடந்தது.

இந்த தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முதல், 29ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us