/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம் சூரிய, சந்திர பிரபையில் அருள்பாலித்த உற்சவர் பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம் சூரிய, சந்திர பிரபையில் அருள்பாலித்த உற்சவர்
பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம் சூரிய, சந்திர பிரபையில் அருள்பாலித்த உற்சவர்
பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம் சூரிய, சந்திர பிரபையில் அருள்பாலித்த உற்சவர்
பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவம் சூரிய, சந்திர பிரபையில் அருள்பாலித்த உற்சவர்
ADDED : ஜூன் 21, 2024 12:34 AM

சென்னை, பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று சூரிய, சந்திர பிரபையில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோற்சவம் கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாள் சேஷ, சிம்ம வாகன புறப்பாடு நடந்தது.
மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை, கருடசேவை உற்சவம் நடந்தது. இரவு, அம்ச வாகன புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவத்தின், நான்காம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் மாடவீதிகளை வலம் வந்த பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வரும் 21ம் தேதி காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது.
விழாவின் பிரதான நாளான, 23ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது.
இரவு 9:00 மணிக்கு, தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.
எட்டாம் நாள் விழாவில், காலை லட்சுமி நரசிம்ம திருக்கோல புறப்பாடும், இரவு குதிரை வாகன புறப்பாடும் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை ஆளும் பல்லக்கு, தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
அன்று இரவு அவரோஹணம் எனும் கொடியிறக்கத்துடன், விழா நிறைவு பெறுகிறது.
வெட்டி வேர் தேர் புறப்பாடு, 26ம் தேதி இரவு 9:30 மணிக்கு நடக்கிறது. 27ம் தேதி முதல், 29ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.