/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.1.38 கோடியில் புது தெரு பெயர் பலகைகள் ரூ.1.38 கோடியில் புது தெரு பெயர் பலகைகள்
ரூ.1.38 கோடியில் புது தெரு பெயர் பலகைகள்
ரூ.1.38 கோடியில் புது தெரு பெயர் பலகைகள்
ரூ.1.38 கோடியில் புது தெரு பெயர் பலகைகள்
ADDED : ஜூலை 18, 2024 12:13 AM
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை மண்டலத்தில் ரூ.1.38 கோடியில் புது தெரு பெயர் பலகைகள் அமைக்கப்பட உள்ளன.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15 வார்டுகளில், ஆயிரக்கணக்கான தெருக்கள் உள்ளன. பொதுமக்கள் தெருக்களின் பெயர்களை அறியும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி, தெரு நுழைவாயில்களில், பெயர் பலகைகள் அமைக்கப்பட்டன.
பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த தெரு பெயர் பலகைகள், உரிய பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலான இடங்களில் சேதம் அடைந்து வீணானது.
இதையடுத்து, 300க்கும் மேற்பட்ட தெருக்களில், 1.38 கோடி ரூபாய் செலவில் புது பெயர் பலகைகள் அமைக்கப்பட உள்ளன.