/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள் சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்
சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்
சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்
சங்க அலுவலகத்தில் தீ வைத்த மர்ம நபர்கள்
ADDED : ஜூலை 27, 2024 12:39 AM
கொடுங்கையூர்,
கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர் 3வது பிரதான சாலையில், சென்னை பெருநகர சுமை துாக்கும் தொழிலாளர் சங்கம், 150 சதுரடியில் உள்ளது. தென்னை ஓலையால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் சங்க அலுவலகத்தை, நேற்று மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.
கொருக்குப்பேட்டை, சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.