அண்ணா சாலையில் 4 டன் குட்கா பறிமுதல்
அண்ணா சாலையில் 4 டன் குட்கா பறிமுதல்
அண்ணா சாலையில் 4 டன் குட்கா பறிமுதல்
ADDED : ஜூலை 27, 2024 12:40 AM
சென்னை, திருவள்ளூர் மாவட்டம் ஏறவூர் இலகர் செக்போஸ்ட்டில், நேற்று முன்தினம் டி.எஸ்.பி., பிரியா சக்தி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதில், இரண்டு லாரிகளில், வடமாநிலத்தில் இருந்து ரஜினிகாந்த் பாக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அண்ணாசாலையில் உள்ள 'ராகுல் ஏஜன்சி' கிடங்கிற்கு கொண்டு செல்வது தெரியவந்தது. பாக்கு கடத்தி வந்த அரவிந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, சென்னை வந்த கும்மிடிப்பூண்டி ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசார், அரவிந்த், 37, என்பவரை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவல் அடிப்படையில், நேற்று அண்ணாசாலையில் பிரபல உணவகம் பின்புறம் உள்ள கிடங்கில், சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் அழகு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், 4 டன் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கிடங்கிற்கு 'சீல்' வைத்தனர். அவற்றின் மதிப்பு 16 லட்சம் ரூபாய். கிடங்கின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.