ADDED : ஜூன் 02, 2024 12:15 AM
சென்னை, பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள, மாணவ, மாணவியருக்கு இலவசமாக கராத்தே கற்று கொடுக்க, பெரும்பாக்கம் காவல் நிலையம் முன்வந்துள்ளது. கராத்தேயில் தேசிய அளவில் பட்டம் பெற்றுள்ள தலைமைகாவலர் காமராஜ் பயிற்சி வழங்க உள்ளார்.
தற்காப்பு கலையாகவும், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்குள் வகையிலும், வாரந்தோறும் சனி, ஞாயிற்று கிழமைகளில் பயிற்சி வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவ, மாணவியர் 94990 03079 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.