ADDED : ஜூன் 03, 2024 01:52 AM
அயனாவரம்:அயனாவரம், குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் திலீப்குமார், 25; லோடு ஆட்டோ ஓட்டுனர். இவர் பழைய குற்றவாளி.
இவருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரீத்தி, 22, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பிரீத்தி, ஒரு மாதமாக அவரது அம்மா வீட்டில் தங்கியுள்ளார்.
இதனால், மன வருத்தத்தில் இருந்த திலீப்குமார் நேற்று முன்தினம் இரவு, பிளேடால் தன் கழுத்தை தானே அறுத்துள்ளார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.