Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வாகன நெரிசலில் சிக்கி திணறிய சென்னை

வாகன நெரிசலில் சிக்கி திணறிய சென்னை

வாகன நெரிசலில் சிக்கி திணறிய சென்னை

வாகன நெரிசலில் சிக்கி திணறிய சென்னை

ADDED : ஜூன் 07, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
சென்னையில், வாகன போக்குவரத்துக்கு ஏற்ப கட்டமைப்பு இல்லை. மெட்ரோ ரயில் பணி, குடிநீர் - பாதாள சாக்கடை குழாய் பதிப்பு பணிகள் மற்றும் பிற சேவை துறைகளில் ஒருங்கிணைப்பு இல்லாததால், சாலைகள் கூறுபோடப்படுகின்றன. இப்பணிகளால் சாலையில் சிறிய முதல் பெரிய பள்ளங்கள் வரை விழுந்துள்ளன. இந்த மோசமான சாலைகளில் பயணிக்கும் சிரமம் தொடர்கிறது.

இந்நிலையில், இரு நாட்களாக சென்னையில் பெய்த மழையால், மோசமான சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

கோடம்பாக்கம் - போரூர் போக்குவரத்திற்கு முக்கிய சாலையாக ஆற்காடு சாலையில், குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகனங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றதால், கடும் நரிசல் ஏற்பட்டது.

வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையும், குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையும் இணையும் பகுதியில், மேம்பாலம் உள்ளது.

ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து குன்றத்துார் நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் நேர் திசையிலும், இடதுபுறம் திரும்பி பூந்தமல்லி நோக்கியும், வலதுபுறம் திரும்பி வண்டலுார் நோக்கியும் செல்கின்றன.

அதேபோல், குன்றத்துாரில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் நோக்கி செல்லும் வாகனங்கள் நேர் திசையிலும், இடது மற்றும் வலதுபுறம் திரும்பி வண்டலுார், பூந்தமல்லி நோக்கியும் செல்கின்றன. இதனால், மேம்பாலத்தின் கீழ் நான்கு சாலை சந்திப்பு அதிக போக்குவரத்து உடைய பகுதியாக உள்ளது.

வாகனங்கள் கட்டுப்பாடின்றி, தாறுமாறாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. வாகனங்கள் நகர்ந்து செல்ல முடியாத அளவுக்கு காலை, மாலை நேரங்களில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுகிறது.

 தாம்பரம் மாநகராட்சி, மேற்கு தாம்பரத்தில், கிஷ்கிந்தா - காந்தி - ராஜாஜி சாலைகள் சந்திப்பு கடந்து, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில், பாலாற்று குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.

இந்த குழாயில் உடைப்பு இருப்பதால், பாலாற்று நீரேற்று நிலையத்தில் பம்ப் செய்யும்போது, இந்த சந்திப்பு பகுதி குழாய் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.

ஒரு மாதமாக தொடர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் சாலை சீர்குலைந்து, குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் தினமும் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

கிஷ்கிந்தா - காந்தி சந்திப்பில்

1 மாதமாக வாகன நெரிசல்தாம்பரம் மாநகராட்சி, மேற்கு தாம்பரத்தில், கிஷ்கிந்தா - காந்தி - ராஜாஜி சாலைகள் சந்திப்பு கடந்து, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில், பாலாற்று குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.இந்த குழாயில் உடைப்பு இருப்பதால், பாலாற்று நீரேற்று நிலையத்தில் பம்ப் செய்யும்போது, இந்த சந்திப்பு பகுதி குழாய் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது.ஒரு மாதமாக தொடர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் சாலை சீர்குலைந்து, குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் தினமும் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.



முடங்கியது அண்ணா சாலை

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், 40 இடங்களிலும் வெற்றி பெற்றன.தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், நேற்று மாலை அண்ணா சாலை அறிவாலயத்திற்கு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, வாழ்த்து பெறுவதற்காக ஒரே நேரத்தில் தங்களது வாகனங்களில் வந்தனர். அவர்கள் அண்ணா சாலையை ஆக்கிரமித்து, கார்களை தாறுமாறாக நிறுத்தி சென்றனர்.போக்குவரத்து போலீசார், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, அப்புறப்படுத்த வழி தெரியாததால், வாகன ஓட்டிகளை, சரி செய்யும் வகையில் நடந்து கொண்டனர்.இதனால், வாகனங்கள் நெரிசலில் சிக்கி, ஊர்ந்து சென்றன.



ஆளுங்கட்சி

அடாவடிசென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. இருப்பினும், தற்போது உள்ள சாலைகளிலேயே ஆங்காங்கே 'யு - டர்ன்' வசதிகள் செய்தும், சிக்னல் இன்றி கடந்து செல்லும்படி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அண்ணாசாலை அண்ணா அறிவாலயம் அருகே தலைமை அலுவலகத்திற்கு வருவோருக்கு என, சிக்னலை அமைத்துள்ளனர். இதனாலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து காவல் துறை நன்கு அறிந்தும் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் என்பதால் கண்டும் காணாமல் உள்ளனர். அண்ணா அறிவாலயம் அருகே உள்ள சிக்னலை அகற்றினால் நெரிசல் குறையும்.- வாகன ஓட்டிகள்



சாலையை சீரமைத்த

போக்குவரத்து போலீசார்திருவேற்காடு அடுத்த பாதிரிவேடு சந்திப்பில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பல மாதங்களாக குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. தவிர, சாலையில் குவிந்துள்ள மணலாலும் விபத்து அபாயம் நிலவியது.நேற்று முன்தினம் பெய்த கனமழையால், நெடுஞ்சாலையில் நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.போரூர் ராமச்சந்திரா போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், திருவேற்காடு, பாதிரிவேடு சந்திப்பு சாலை பள்ளத்தில் கட்டட கழிவுகளை கொட்டினர். பின் ஜே.சி.பி., மற்றும் ரோடு ரோலர் இயந்திரம் உதவியுடன், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்தனர்.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், போக்குவரத்து போலீசாரின் இந்த பணியை, வாகன ஓட்டிகள் பாராட்டினர்.



- நமது நிருபர்கள் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us