ADDED : ஜூன் 02, 2024 12:33 AM

லண்டன், லண்டனை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் மிஸ்ராவின் தலைமையிலான, பிரிட்டன் - இந்தியா சட்ட கூட்டாண்மையின் ஆண்டு பரிசளிப்பு விழா, கடந்த, 31ம் தேதி, லண்டனில் உள்ள உச்ச நீதிமன்ற மண்டபம் எண் 1ல் நடந்தது.
இந்த விழாவில், இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு உள்ளிட்ட முக்கிய சட்ட நிபுணர்கள் பலர் பங்கேற்றனர். இதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் மற்றும் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி ஆகியோர், பிரிட்டன் - -இந்தியா சட்ட வழித்தடத்தில் மேன்மைக்கான பரிசுகளை பெற்றனர்.
இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்தியா - பிரிட்டன் சட்ட கூட்டாண்மை நிறுவனர் மற்றும் தலைவர் அஜித் மிஸ்ரா, பிரிட்டன் மற்றும் வேல்ஸின் சட்ட சமுதாயத்தின் தலைவர் மற்றும் பிரிட்டன் மற்றும் வேல்ஸின் பார் கவுன்சிலின் தலைவர் ஆகியோர் இந்த பரிசுகளை வழங்கினர்.