/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டுகோள் நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டுகோள்
நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டுகோள்
நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டுகோள்
நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய நிலத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டுகோள்
ADDED : ஜூலை 03, 2024 12:26 AM
படப்பை, செரப்பணஞ்சேரியில், நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய நிலத்தில், அரசு தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கரசங்கால் - -மணிமங்கலம் சாலையானது, வண்டலுார் - -வாலாஜாபாத் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் - -தாம்பரம் நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலையோரம் கரசங்காலில், 41 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள குழந்தைகள், சாலையோரம் விளையாடுகின்றனர்; சாலையோரம் அமர்ந்து பேசுகின்றனர்.
இதனால், அதிவேகமாக செல்லும் வாகனங்களால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, நரிக்குறவர் மக்களுக்கு வேறு பகுதியில் வசிக்க இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, இவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக நிலம் வழங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக படப்பை அருகே செரப்பணஞ்சேரி கிராமத்தில், ஒரு குடும்பத்திற்கு 2 சென்ட் இடம் என, தலா 41 நரிக்குறவர் குடும்பத்திற்கு இலவசமாக நிலம் வழங்க, 1.20 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, அவை தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது. இதையடுத்து கடந்த 2022 அக்., 7ம் தேதி, மணிமங்கலம் போலீசார் பாதுகாப்புடன், வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
அதன் பின், நரிக்குறவர்களுக்கு நிலம் வழங்க உள்ள இடத்தை அளவீடு செய்தனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு நிலம் ஒப்படைக்கப்படவில்லை.
இதனால், மீண்டும் அந்த இடம் ஆக்கிரமிப்பில் சிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழக அரசு, 'குடிசை இல்லாத மாநிலம்' என்ற இலக்கை அடைய, குடிசை வீட்டில் வாழும் ஏழை மக்களுக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பில், இலவச தொகுப்பு வீடு கட்டித்தர உள்ளதாக, அண்மையில் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், செரப்பணஞ்சேரியில் நரிக்குறவர்களுக்கு ஒதுக்கிய அரசு நிலத்தை அவர்களிடம் ஒப்படைத்து, அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.