Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 6.22 லட்சம் பீர் பாட்டில்கள் அழிப்பு கும்மிடிப்பூண்டியில் அரசு அதிரடி

6.22 லட்சம் பீர் பாட்டில்கள் அழிப்பு கும்மிடிப்பூண்டியில் அரசு அதிரடி

6.22 லட்சம் பீர் பாட்டில்கள் அழிப்பு கும்மிடிப்பூண்டியில் அரசு அதிரடி

6.22 லட்சம் பீர் பாட்டில்கள் அழிப்பு கும்மிடிப்பூண்டியில் அரசு அதிரடி

ADDED : ஜூலை 10, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாக்குப்பம் கிராமத்தில், 33 ஏக்கர் பரப்பளவில் 'அப்போலோ டிஸ்டிலரீஸ் அண்டு பிவரேஜஸ்' என்ற பெயரில் தனியார் பீர் உற்பத்தி தொழிற்சாலை, 2011ல் துவங்கப்பட்டது. ஆண்டுக்கு, 7.50 லட்சம் லிட்டர் பீர் உற்பத்தி செய்த அந்த தொழிற்சாலை, நிர்வாக குளறுபடியால் நஷ்டமடைந்து 2018ல் மூடப்பட்டது.

ஆறு ஆண்டுகளாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதமாக தொழிற்சாலையின் பின்புறம் உள்ள சுவரை துளையிட்டு மர்ம நபர்கள், திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த பழைய பொருட்களை திருடிய கும்பல், அங்கிருந்த காலாவதியான பீர் பாட்டில்களையும் திருடி குடித்தனர்.

தொழிற்சாலையின் பின்புறம், துளையிட்ட சுவற்றின் அருகே ஏராளமான குடித்து காலியான பீர் பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளால் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, சுதாரித்துக்கொண்ட கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், தொழிற்சாலையில் பீர் திருட்டு குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து நடந்த ஆய்வில் தொழிற்சாலை குடோனில், காலாவதியான 6.22 லட்சம் பீர் பாட்டில்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து அவற்றை அழிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று, பொன்னேரி சப்- -கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த் தலைமையில், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி மற்றும் போலீசாரால் காலாவதியான பீர் பாட்டில்கள் அழித்து, தொழிற்சாலை வளாகத்திலேயே பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us