ADDED : ஜூலை 03, 2024 12:32 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
சிகிச்சை முடிந்து, ஐந்து நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின், தடுப்பூசி போடப்பட்டு, பிடித்த இடத்திலேயே நாய்கள் விடப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில், 27 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.