ADDED : ஜூன் 24, 2024 02:33 AM

தண்டையார்பேட்டை:பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் யோகராஜ், 22. இவர் நேற்று, புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடியில் இருந்து உறவினர் காரை எடுத்து தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெரு வழியாக வந்தார். அப்போது திடீரென, காரில் இருந்து புகை வெளியேறி உள்ளது.
யோகராஜ், காரில் இருந்து கீழே இறங்கிய சிறிது நேரத்தில், தீ மளமளவென பரவி கார் கொழுந்து விட்டு எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், 45, என்பவரது காரிலும் தீப்பிடித்து, கார் சேதமடைந்தது.
தண்டையார்பேட்டை தீயணைப்பு துறையினர் வந்து, தீயை அணைத்தனர். இதில், இரு கார்களும் நாசமாகின. காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.