/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலிகுடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : ஜன 29, 2024 04:24 AM
கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரியில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டட மேஸ்திரி பலியானார்.
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கன்னியப்பன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி, 56. கட்டட மேஸ்திரி.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று வேலைக்கு சென்று, வீட்டுக்கு வந்தவர், வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து குடித்து விட்டு, அங்கேயே துாங்கி விட்டார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால், அவரின் மனைவி மற்றும் மகள், வீட்டின் மொட்டை மாடியில் சென்று பார்த்தனர். அப்போது, அவர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின், வீட்டை சுற்றி பார்த்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்து, கீழே இறந்து கிடந்தார்.
அவர்கள் அளித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்தில் வந்து, பார்த்தசாரதியின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.