/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கை முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசைசெங்கை முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை
செங்கை முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை
செங்கை முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை
செங்கை முருகன் கோவில்களில் தைப்பூசம் விமரிசை

தைப்பூச தெப்போற்சவம்
விழாவில், இரவு 7:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி சரவணப்பொய்கையில் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் குளத்தில் கற்பூரம் ஏற்றி கந்தனை வழிபட்டனர்.
மாசி உற்சவ பந்தக்கால்
இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ பெருவிழா, வரும் பிப்., 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்காக, கோவில் வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
முள்ளிக்குளத்துார்
திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகுளத்துார் பகுதியில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை முத்துகுமார சுவாமி கோவிலில், தைப்பூச நாளான நேற்று, ஐந்தாம் ஆண்டு உற்சவமாக, தேர் உலா விழா நடந்தது.
பெருக்கரணை
பெருக்கரணை மரகத தண்டாயுதபாணி திருக்கோவிலில், நேற்று தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு, காலை 8:30 மணிக்கு கலச பூஜைகள், கணபதி யாகம் நடந்தன.
மறைமலை நகர்
மறைமலைநகர் செல்வமுத்துக்குமார சுவாமி கோவிலில், நேற்று காலை 7 மணிக்கு, கலச பூஜை, கணபதி யாகம் நடத்தப்பட்டது.
அன்னதானம்
அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துாரில் உள்ள சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பில், வள்ளலாரின் திருவுருவப் படத்திற்கு மலர் துாவி, தீபஜோதி ஏற்றப்பட்டது.


