Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கல்லுாரி பஸ் மோதி மாணவர் பலி

கல்லுாரி பஸ் மோதி மாணவர் பலி

கல்லுாரி பஸ் மோதி மாணவர் பலி

கல்லுாரி பஸ் மோதி மாணவர் பலி

ADDED : ஜன 12, 2024 12:07 AM


Google News
குரோம்பேட்டை:ஆதம்பாக்கம், சுரேந்தர் நகரை சேர்ந்தவர் சஞ்ஜித் ராஜ், 20. கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரி முடிந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில், சஞ்ஜித் ராஜ் மீது தனியார் கல்லுாரி பேருந்து மோதியது. இதில், நிலை தடுமாறி விழுந்த அவர் மீது, பேருந்தின் பின் டயர் ஏறியது. படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பேருந்து ஓட்டுனர் வாலாஜாபாத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம், 61 என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us