Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்கப்படுமா?

ADDED : ஜன 11, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், 1936-ல் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படத் துவங்கியது. கடந்த 90 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமையான கட்டடத்தில் தற்போது நீர் கசிவு ஏற்படுகிறது.

மேலும், சில தினங்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக, பதிவாளர் அலுவலகத்தில் மழைநீர் புகுந்தது. இதனால், ஆவணங்களை பாதுகாப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது.

தற்போது, தேங்கியுள்ள மழைநீரை, மின் மோட்டார் வாயிலாக வெளியேற்றி வருகின்றனர். சாலையின் உயரத்தைக் காட்டிலும், பதிவாளர் அலுவலகம் தாழ்வாக உள்ளதால், மழைநீர் தேங்கி நிற்கிறது.

எனவே, தற்காலிகமாக சார் - பதிவாளர் அலுவலகத்தை மாற்று இடத்தில் அமைத்து, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிய கட்டடம் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us